Tuesday 7th of May 2024 01:08:29 AM GMT

LANGUAGE - TAMIL
செயற்கைக்கோள்கள்
செயற்கைக்கோள்கள்  தொடர்பில் ஆய்வாளர்களின் கவலை

செயற்கைக்கோள்கள் தொடர்பில் ஆய்வாளர்களின் கவலை


செயற்கைக்கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்துலாக விளங்குவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்க ‘ஸ்டார்லிங்க்’ என்ற திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

முதற்கட்டமாக தலா 227 கிலோ எடை கொண்ட 60 செயற்கைகோள்கள் ஒரே நேரத்தில் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் கடந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட்டன.

விண்வெளியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய பதிவு வெளியாகியது. புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் அந்த செயற்கை கோள்கள் நட்சத்திரங்கள் நேர்கோட்டில் அணிவகுத்து செல்வதைப் போல் காட்சி அளிக்கின்றன. செயற்கைகோள்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அவை நட்சத்திரங்கள் போன்று ஜொலிக்கின்றன.

மேலும் இந்த செயற்கைகோள்கள் ரேடியோ அதிர்வெண்களையும் உமிழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த செயற்கைகோள்களை வெறும் கண்களால் கூட காண முடியும் என்பதால் வானியல் தோற்றத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்


Category: தொழில்நுட்பம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE